செல்லும் வழி அறியாமல்
சேரும் இடம் புரியாமல்
சேரும் இடம் புரியாமல்
போகும் வேகம் உணராமல்
பார்க்கும் விழிகள் நோக்காமல்
தாயின் தோள் சரிந்து
உலகம் மறந்து
தூங்கும் சிறு குழந்தையின்
இமைகளுக்குள் படர்ந்திருக்கிறது
உன் மீதான என் நம்பிக்கை.
~.~. JC நித்யா ~.~.