நிலவென்பது...
உன்னைப் பற்றியதான
கனவுகளின் துவக்கப்புள்ளி.
உன் நினைவுதரும் குளிர்மைக்கு
ஒளிரும் சாட்சி.
எல்லையின்றி பொங்கிப் பெருகும்
உன் அன்பின் ஒளி விளக்கம்.
உன்முகம் தேடியலையும்
பார்வைகளுக்கு நிரந்தர உறைவிடம்.
சுவாசிக்க மறந்த நொடிகளின்
கூட்டுத் தோற்றம்.
என்றோ உதிர்த்த புன்னகையின்
உயிர் வடிவம்.
ஆழமான உண்மையாய்
சுடரும் அதிசயம்.
இமைக்காமல் பார்க்கத் தூண்டும்
பிரம்மாண்டம்.
என் வானில்
என்றும் மறையாத
நித்திய வெளிச்சம்...
~.~. ஜெ.சி. நித்யா ~.~.