ஏன் இப்படி?



சாக நினைக்கையில்
உயிராய் தெரிகிறாய்.

எப்படி முற்றுப்புள்ளியிடுவதென
தயங்கி

மீண்டும்
வாழ முயல்கையில்
கனவாய் மறைகிறாய்.


~.~. ஜெ.சி. நித்யா ~.~.


உயிர்நிலம்




வளர்ந்து விட்டதனால்
நகர்ந்து  வேறிடம் சென்றிட
உன்மேல் ஊன்றி நிற்பவை
கால்கள் அல்ல
என் வேர்கள்.



~.~. ஜெ.சி. நித்யா ~.~.


இயல்பு




காற்றில் கிழிபடுவதற்கென்றே
விரிந்திருக்கும்
வாழை இலை போல

உன் நினைவுகளில் அலைபடுவதற்கென்றே
தவித்திருக்கும்
நெஞ்சம்..


~.~. ஜெ.சி. நித்யா ~.~.


Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.