நான் உன்னை அறிந்ததில்லை.
நீயே என்னை தெரிந்தெடுத்தாய்.
நான் உன்னை தேடவில்லை.
நீயே என்னை கண்டறிந்தாய்.
அன்பின் வாசமறியாதிருந்தேன்
நீயே என்னை நேசித்தாய்.
வாழ்தலின் பொருளறியாதிருந்தேன்
நீயே வாழ்வாகினாய்.
மதமென்ன மதம்
மனமெல்லாம் உயிரெல்லாம்
நீயே நிறைந்திருக்கையில்.
என்னவென்று வாழ்த்துவது.
நின் பிறந்த நாளில்.
எனை ஊடுருவிய உனதன்பு
எல்லோருக்குள்ளும் வியாபிக்க வாழ்த்துகிறேன்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
0 comments:
Post a Comment