என் ப்ரிய இயேசுவிற்கு...



















நான் உன்னை அறிந்ததில்லை.
நீயே என்னை தெரிந்தெடுத்தாய்.

நான் உன்னை தேடவில்லை.
நீயே என்னை கண்டறிந்தாய்.

அன்பின் வாசமறியாதிருந்தேன் 
நீயே என்னை நேசித்தாய்.

வாழ்தலின் பொருளறியாதிருந்தேன்
நீயே வாழ்வாகினாய்.

மதமென்ன மதம்
மனமெல்லாம் உயிரெல்லாம் 
நீயே நிறைந்திருக்கையில்.

என்னவென்று வாழ்த்துவது.
நின் பிறந்த நாளில்.
எனை ஊடுருவிய உனதன்பு
எல்லோருக்குள்ளும் வியாபிக்க வாழ்த்துகிறேன்.




~.~. ஜெ.சி. நித்யா ~.~.



மன்னியுங்கள்!













மன்னியுங்கள். 
உங்களுக்கு தேவைப்படும் 
செயற்கை புன்னகைகள் என்னிடமில்லை 
அசல் புன்னகைகளை தர விருப்பமில்லை.

மன்னியுங்கள்.
உலகெல்லாம் தீயதென கருதி கதவடைத்து வீட்டினுள் ஒளிந்துகொள்வதில் சம்மதமில்லை.
என் வழியெங்கும் நல்லவர்களை மட்டும் மனதில் சேமிக்கவே ஆசைப்படுகிறேன்.

மன்னியுங்கள்.
அடுத்தவர்களை குற்றப்படுத்துவது தான் உங்களை பக்திமான்களாக காட்டிகொள்வதெனில் எனக்கு அதில் இஷ்டமில்லை.
"உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன்" என்ற குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது எனது செல்களில்.

மன்னியுங்கள்.
உங்களை போன்றதொரு வாழ்க்கைக்கு நான் வடிவமைக்கப்படவில்லை.
எனது வாழ்க்கையின் எல்லைகள் உங்களை வரவேற்கவில்லை.


~.~. ஜெ.சி. நித்யா ~.~.


...

.
சிறு வயதில் உறவுகள், பாசம், வேறேதும் முக்கியமில்லை,
படிப்பும் வெற்றியுமே முக்கியம் என்று சொல்லி குழந்தைகளை வளர்க்கிறோம். 

அவர்கள் பெரியவர்களாகி வேலையும் வசதி வாய்ப்புமே முக்கியமென வாழ நேர்கையில் அவர்களை குறைசொல்கிறோம். 

எங்கிருந்து சிதைந்து போனது அன்பின் அழகிய வேர்கள்!!



~.~. ஜெ.சி. நித்யா ~.~.


Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.