Showing posts with label தெரியவில்லை. Show all posts
Showing posts with label தெரியவில்லை. Show all posts

தெரியவில்லை..





தெரியவில்லை தான்
எனக்கு..

செயற்கையாய் புன்னகைக்க..
உணராததை உச்சரிக்க...


பணத்திற்கும் பதவிக்கும் மரியாதை கொடுக்க..
அர்த்தமற்ற வேஷங்களில் பொய்யாய் நடிக்க..

கணினித்திரையில் மழை ரசிக்க...
உயிர்சிலிர்க்கும் மழைநடுவே குடைவிரிக்க..

கையேந்தும் மழலை கண்டு
விழிஈரம் கசியாமல் நகர..

முகத்திற்காக ஒரு சிரிப்பும் முகம் மறைந்தபின்
ஒரு பேச்சுமாக பேசித் திரிய...


சிறு இலை என்னுள் ஏற்படுத்தும் பாதிப்புகளை தவிர்த்திட
இயந்திரங்களை பார்த்து பிரமிக்க... 

பயணத்தில் இதமான பூங்காற்றை அனுபவியாது
வாகன நெரிசல் பற்றி விமர்சிக்க...

சத்தியமாக
தெரியவில்லை தான்
எனக்கு..

பிழைப்புக்காக
வாழ்க்கையை விட்டுத் தர...


~.~. JC நித்யா ~.~.

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.