தலைவன்

 














ஒரு தலைவனுக்கான இடம்
வெறுமையாகவே இருக்கிறது.
எதை எதையோ இட்டு நிரப்பிட
முயற்சிக்கிறீர்கள்.

மொழி பற்று
ஆணவம்
அலட்சியம்
பிம்பம்
வெற்று பேச்சு
ஆடல் பாடல் 
ஆரவாரம்
எள்ளல்

என எதிலும் நிரம்பாமல்
வெறுமையாகவே இருக்கிறது.

யார் உண்மையான தலைவன்
தன் மக்களுக்காக உயிரையும் கொடுப்பவன்.
இருளில் இருப்பவர்களை வெளிச்சத்துக்கு வழி நடத்துபவன்.
காலிடறி விழுபவனை தாங்கி பிடித்து தூக்கி விடுபவன்.
தன்னை வெறுத்து தன் மக்களை நேசிப்பவன்.
தனக்கான உரிமைகளை விட்டு மக்களை உயர்த்துபவன்.
உண்மையையும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் ஓம்புபவன்.

அப்படி ஒரு தலைவனுக்கான இடத்தை
வெறும் பிம்பங்களை இட்டு நிரப்புகிறீர்கள்.
பரிதாபமாய் இருக்கிறது.
நிஜமென்று நினைத்து
நிழலை பின்தொடர்கிறீர்கள்
எங்கு இட்டு செல்லுமோ.
பதைக்கிறது மனம்.

~. ~. ஜெ. சி. நித்யா. ~. ~.

10 மே 2026.


சுழல்காற்றில்

 










சுழல்காற்றில் சிக்கியவள்
பெருங்காற்றில் அடிபட்டவள்
இடித்து உடைத்து
அடித்து துவைத்து
கசக்கி பிழிந்து
சல்லி சல்லியாய் நொறுக்கி
அடையாளம் அழிந்து
உருவிழந்து நிற்கையில்


"ஏன் இப்படி?" என்கிறேன்.
"இதில் தான் என் வழி" என்கிறாய்.

சாதாரணமானவள் நான்.
வானுயர்ந்த நின் எண்ணங்களை
புரியத் தெரியாத அறிவிலி நான்.

நம்பிக்கையின் அடித்தளம்
உலுக்கப்படும்போது

இருளின் அடர்த்தி
அதிகரிக்கும்போது

சாய்ந்து கொள்ள தோள்கள்
இல்லாதபோது

அடுத்த அடி எடுத்து வைக்க
வலிமையற்றபோது

கண்ணீராய் விழுகிறேன்
நின் பாதங்களில்.


~. ~.ஜெ. சி. நித்யா. ~. ~
26.02.2026.


"கர்த்தருடைய வழி 
சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும்
 இருக்கிறது."

நாகூம் 1:3

வாக்குறுதி

 





















நின் விழிகளில் நானும்
நின் கரங்களில் என் விரல்களும்
இருப்பதை விட
வேறென்ன வேண்டும்
நிச்சயங்களற்ற இந்த
வாழ்வினை சந்திக்க.

 ~.~. ஜெ.சி.நித்யா .~.~
01.01.2026


 Touched by this verse:
"கர்த்தராகிய நான் ... அவளைப் பார்த்து, 
அவள் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, 
அவளுக்குச் சொல்லுகிறதாவது..."
ஏசாயா 45:1

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.