சிநேகிதம்















கடுங்குளிர் பிரதேசத்தில்
அரிதாய் முளைத்திடும்
சிறு கீற்று வெளிச்சத்தின்
இளஞ்சூட்டைப் போல
கதகதப்பாயிருக்கிறது

உன் நினைப்பு.
வலி பள்ளத்தாக்குகளில்
அலைந்திருக்கும் எனக்கு.

  .~.~.~.~.~.~.~.~

பின்னிரவின் அமைதியில்
இதமாய் மிளிர்ந்திடும்
ஒற்றை நட்சத்திரம்
போதுமானதாயிருக்கிறது.

உன் ஒளிப்புன்னகை
சிதறல்களில் ஏதேனுமொரு சிறு சில்லை
தேடிக்கொண்டிருக்கும் எனக்கு.

.~.~.~.~.~.~.~.~

புல் அறுபட்ட வெளியின்மேல்
சுகமாய் பெய்திடும்
குளிர்ந்த மழை போல
உயிர் விளைய செய்கிறது

உன் வார்த்தைகள்.

நினைவறுந்த பொழுதில்

சரிந்துகிடக்கும் எனக்குள்.
.~.~.~.~.~.~.~.~

~.~. ஜெ.சிநித்யா ~.~

3 comments:

Unknown Nov 17, 2009, 3:12:00 PM  

குளிர்ந்த மழை...
உன் வார்த்தைகள்...

Nice comparision!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish Nov 26, 2009, 2:03:00 PM  

Ninaivum, punnakaiyum, vaarththaikalumai intha சிநேகிதம் azhagu...

JC Nithya Nov 26, 2009, 4:18:00 PM  

நன்றி தோழி :)

நன்றி sathish! இந்த அழகான சிநேகிதம்தான் வாழ்க்கையின் சாரமற்ற பொழுதுகளை அர்த்தமுள்ளதாக செய்கிறது..:)

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.