நின் கரங்களில் என் விரல்களும்
இருப்பதை விட
வேறென்ன வேண்டும்
நிச்சயங்களற்ற இந்த
வாழ்வினை சந்திக்க.
~.~. ஜெ.சி.நித்யா .~.~
உன்னை அறிந்ததற்காய் பெருமிதமடைகிறேன்.
12.06.2025.
~.~. ஜெ. சி. நித்யா .~.~.
இருளின் தனிமையில் தான்
ஓரு ஒளி நட்சத்திரத்தின்
தேவை உணரப்படுகிறது.
எல்லாமும் பெற்று
செயற்கை ஒளிகளில் மயங்கித்
திரியும்போது
புரியாத
நின் நட்சத்திரத்தின் மேன்மை
இப்பொது புரிகிறது.
மனிதர் எதிர்பார்க்காத
எளிய சூழ்நிலையில்
ராஜாதி ராஜனின்
பிறப்பு நிகழ்ந்ததை
இன்னமும் பலரால்
ஜீரணிக்க முடியவில்லை.
சமூகத்தின் அடிமட்டத்திற்கும் கீழ் சென்று
இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது
முழு உலகுக்கான மீட்பு
என்று சொல்லாமல் சொன்ன
உன் கம்பீரம்
மெய்சிலிர்க்க செய்கிறது.
நின் போல் பிறந்தவர் எவரும் இல்லை.
நின் போல் வாழ்ந்தவரும் எவரும் இல்லை.
நின் போல் இறந்தவரும் எவரும் இல்லை.
நின் போல் உயிர்த்தெழுந்து வாழ்பவரும் எவரும் இல்லை.
நீ பிறந்த இந்த பொன்நாளில்
இருளில் இருப்பவர்களுக்கு ஒளி பிரகாசிக்கட்டும்.
வறியவர்களின் நம்பிக்கை துளிர் விடட்டும்.
வலிமை அற்றவர்கள் வாழும் சக்தியை பெறட்டும்.
உலகத்தின் தீமைகள் வழுவிழக்கட்டும்.
போலி பகட்டுக்கள் ஒழிந்தோயட்டும்.
அன்பு ஒன்றே ஆதராமாக உலகம் அறியட்டும்.
நீ பிறந்ததினால் தான் உலகம்
இன்னும் நிலைத்திருக்கிறது.
நின் வாழ்வு தான்
எங்களை வாழ வைக்கிறது.
இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்!
~.~. ஜெ. சி. நித்யா~.~.
~.~. ஜெ. சி. நித்யா.~.~.
Copyright © 2016 உயிரின் தேடல்...
Template design by: Raycreations.net, Ray Hosting
All pictures used in this blog except few are taken from the web.
Credits belong to the actual owners. Thanks.