வெறுமையாகவே இருக்கிறது.
எதை எதையோ இட்டு நிரப்பிட
முயற்சிக்கிறீர்கள்.
மொழி பற்று
ஆணவம்
அலட்சியம்
பிம்பம்
ஆடல் பாடல்
ஆரவாரம்
என எதிலும் நிரம்பாமல்
வெறுமையாகவே இருக்கிறது.
யார் உண்மையான தலைவன்
தன் மக்களுக்காக உயிரையும் கொடுப்பவன்.
இருளில் இருப்பவர்களை வெளிச்சத்துக்கு வழி நடத்துபவன்.
காலிடறி விழுபவனை தாங்கி பிடித்து தூக்கி விடுபவன்.
தன்னை வெறுத்து தன் மக்களை நேசிப்பவன்.
தனக்கான உரிமைகளை விட்டு மக்களை உயர்த்துபவன்.
உண்மையையும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் ஓம்புபவன்.
அப்படி ஒரு தலைவனுக்கான இடத்தை
வெறும் பிம்பங்களை இட்டு நிரப்புகிறீர்கள்.
பரிதாபமாய் இருக்கிறது.
நிஜமென்று நினைத்து
நிழலை பின்தொடர்கிறீர்கள்
எங்கு இட்டு செல்லுமோ.
பதைக்கிறது மனம்.
~. ~. ஜெ. சி. நித்யா. ~. ~.
10 மே 2026.


0 comments:
Post a Comment