சுழல்காற்றில் சிக்கியவள்
பெருங்காற்றில் அடிபட்டவள்
இடித்து உடைத்து
அடித்து துவைத்து
கசக்கி பிழிந்து
சல்லி சல்லியாய் நொறுக்கி
அடையாளம் அழிந்து
உருவிழந்து நிற்கையில்
"ஏன் இப்படி?" என்கிறேன்.
"இதில் தான் என் வழி" என்கிறாய்.
சாதாரணமானவள் நான்.
வானுயர்ந்த நின் எண்ணங்களை
புரியத் தெரியாத அறிவிலி நான்.
நம்பிக்கையின் அடித்தளம்
உலுக்கப்படும்போது
உலுக்கப்படும்போது
இருளின் அடர்த்தி
அதிகரிக்கும்போது
சாய்ந்து கொள்ள தோள்கள்
இல்லாதபோது
அடுத்த அடி எடுத்து வைக்க
வலிமையற்றபோது
கண்ணீராய் விழுகிறேன்
நின் பாதங்களில்.
~. ~.ஜெ. சி. நித்யா. ~. ~
26.02.2026.
"கர்த்தருடைய வழி
சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும்
சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும்
இருக்கிறது."
நாகூம் 1:3


0 comments:
Post a Comment