
முள்ளுக்கும் வலித்திருக்கும்
உம் தலையில் கிரீடமாக சூட்டப்பட்ட போது...
உம் தலையில் கிரீடமாக சூட்டப்பட்ட போது...
மரத்திற்கும் வலித்திருக்கும்
சிலுவையாக செய்யப்பட்டு நீர் சுமந்த போது...
சிலுவையாக செய்யப்பட்டு நீர் சுமந்த போது...
நிலத்திற்கும் வலித்திருக்கும்
உம் பட்டு பாதம் தள்ளாடி நடந்த போது...
இரும்பும் உருகியிருக்கும்
உம் பட்டு பாதம் தள்ளாடி நடந்த போது...
இரும்பும் உருகியிருக்கும்
ஆணியாக உம் மீது அறையப் பட்ட போது..
கல்லும் கசிந்திருக்கும்
உம் புனித இரத்தம் பட்டுத் தெறித்த போது....
கல்லறையும் அழுதிருக்கும்
உயிரற்று நீர் உள்ளே வைக்கப் பட்ட போது...
உயிரற்று நீர் உள்ளே வைக்கப் பட்ட போது...
சிருஷ்டி மொத்தமும் துடித்திருக்கும்
நீர் அனுபவித்த பாடுகளை பார்த்த போது...
நீர் அனுபவித்த பாடுகளை பார்த்த போது...
ஏன் மனிதனுக்கு மட்டும் இன்னும் புரியவில்லை
அத்தனை வலியும் அவனுக்காகத் தான் நீர் அனுபவித்தீர் என்று?
அத்தனை வலியும் அவனுக்காகத் தான் நீர் அனுபவித்தீர் என்று?
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
[ 'துதி மலர்' செப்டம்பர் 2002 - மாத இதழில் வெளியிடப்பட்டது]