
கடும் பசியில் வயிறு எரிந்தாலும்
சுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக
யாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும்
அந்த சின்னஞ் சிறு குழந்தையை
நான் கண்டு கொள்ளாமல் நகரும் போது...
கல்லூரி கேண்டீனில்
குளிர் பானங்களை எடுத்து கொடுத்து விட்டு
கல்லூரி கேண்டீனில்
குளிர் பானங்களை எடுத்து கொடுத்து விட்டு
எங்களையும் எங்கள் சுடிதார்களையும்
தாகத்தோடு பார்க்கும்
அந்த ஏழைச் சிறுமியின் பார்வையை
நான் நாசூக்காய் தவிர்க்க முற்படும் போது...
பேருந்து நிலைய வாசலில்
வீங்கிப் போய் விகாரமாயிருக்கும்
தனது கால்களை காண்பித்து
ஏதாவது கேட்கும்
அந்த மனிதனைப் பார்த்து
"அய்யோ பாவம்" என்று
நான் முகத்தை திருப்பிக் கொள்ளும் போது...
வெட்கப் படுகிறேன்.
சுகமாயிருக்கும் இந்த
எனது நிலை குறித்து.
வலியுணர்கிறேன்.
ஈரமற்ற இயந்திர வாழ்க்கையில்
வறட்சி பிரதேசமாய்
மாறிப் போன
எனது மனதை நினைத்து.
"பசியாயிருந்தேன்,
நீங்கள் எனக்கு போஜனங்கொடுக்கவில்லை.
தாகமாயிருந்தேன்,
தாகமாயிருந்தேன்,
நீங்கள் என் தாகத்தை தீர்க்கவில்லை.
வியாதியாயிருந்தேன்,
வியாதியாயிருந்தேன்,
நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை.
மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு
நீங்கள் எதை செய்யாதிருந்தீர்களோ
அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள்."
( பைபிள்: மத்தேயு 25:42-45)
~.~. ஜெ.சி. நித்யா ~.~.