எல்லாருக்கும் ஒரு முகம் இருக்கிறது
ஊருக்கு காண்பிக்க...
ஊருக்கு காண்பிக்க...
அழகாய் அலங்கரிக்கப்பட்ட பொழுதில்...
சூரிய வெளிச்சத்தில் இயற்கை பின்னணியில்.
அந்நிய மண்ணில் அடையாளம் இழக்காமல்...
நண்பர்களோடு விளையாடினபோது...
கனவு கண்ட பணியிடத்தில்...
உயிருக்குயிராய் நேசிக்கும் நபரோடு...
ஒரு நாய்குட்டியோடு அல்லது ஒரு பறவையோடு
எல்லா செல்வத்திலும் மேலான குழந்தைகளோடு...
ஒரு நாய்குட்டியோடு அல்லது ஒரு பறவையோடு
எல்லா செல்வத்திலும் மேலான குழந்தைகளோடு...
சற்று மெருகேற்றி...சற்று ஒளி கூட்டி...
அழகாய் பகிர எல்லாருக்கும் ஒரு முகம் இருக்கிறது...
அவள் இன்னமும் தேடுகிறாள்.
தனது முகங்களின் குவியலுக்குள்.
மாசற்ற அன்பினால் நிறைந்து
மனமகிழ்ந்து சிரித்த பொழுதொன்றின் முகத்தை...
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
25 May 2024.