எல்லாம் அற்று அகன்று
தனித்திருக்கிறேன்.
எதைக் கொண்டாடுவது?
இத்தனை வருஷங்கள் வாழ்ந்ததையா
இன்னும் எத்தனை நாட்கள்
என்று கூட தெரியா
இந்நிலையையா
எதற்கு இத்தனை தூரம் வந்தேன்
தெரியாது.
தெரியாது.
ஏனிருக்கிறேன் இன்னும்
தெரியாது.
யாருக்காக வாழ்வது
கையில் எதுவுமில்லை.
வெறுமையாய் நிற்கிறேன்.
வாழ்வின் விளிம்பில்.
கையில் எதுவுமில்லை.
வெறுமையாய் நிற்கிறேன்.
வாழ்வின் விளிம்பில்.
இருதயத்தின் சதையை
பிய்த்தெடுப்பது போல்
பிய்த்தெடுப்பது போல்
தாள முடியா வலி.
எனக்கான வெளிச்சம் எங்குமில்லை.
எனக்கான நேசம் எங்குமில்லை.
நொறுங்கி இருக்கிறேன்.
முற்றிலுமாய்.
எனக்கான நேசம் எங்குமில்லை.
நொறுங்கி இருக்கிறேன்.
முற்றிலுமாய்.
என் தேவனே என் தேவனே
எனக்கான நின் பாதை
எனக்கான நின் பாதை
இங்கிருந்து தான் தொடங்குகிறதா?
எல்லாவற்றையும் இழந்த பின் தான்
என் சிலுவை எது என்ற புரிதல் வருமா?
உனையன்றி உறவேதுமில்லை.
நீயின்றி வாழ்வேயில்லை.
வேறெங்கு செல்வேன்?
ஜீவனே நீயாக இருக்கையில்.
முடிவின் புள்ளியில்
குவிந்திருக்கிறது
துவக்கத்தின் ஊற்று.
Nithya JC.
15 May 2024.
15 May 2024.
0 comments:
Post a Comment