திக்குத் தெரியாத காட்டில்
திகைத்து நிற்கும் போது மட்டுமல்ல.
தினசரி வாழ்க்கையின்
சின்னஞ் சிறிய முடிவுகளுக்கும்
திணறி தவிக்கையில்
திசை காட்டும் வெளிச்சமாய்
நின் வார்த்தை
மனதை நிறைக்கிறது.
அகிலத்தையும் படைத்த
அதே வார்த்தை தான்
இந்த சிறியவளுக்காகவும்
இறங்கி வருகிறது.
இப்படி வாழ்தல் எத்தனை
பெரும்பாக்கியம்!
தேனாய் தித்திக்கும்
அதே வார்த்தைதான்
திடப்படுத்தி திரும்ப எழுந்து
நிற்கவும் செய்கிறது.
இதுவன்றி வேறெது பேரின்பம்!
~. ~. ஜெ.சி. நித்யா.~.~