பாதங்களின் கீழிருக்கும் பூமி
அங்குலம் அங்குலமாய் உருவப்படும்போதும்
மனதில் சிறு சலனமுமின்றி
பொங்கும் தைரியம் கண்ணில் தெறிக்க
நிமிர்ந்து நின்று இந்த உலகமே
மனதில் சிறு சலனமுமின்றி
பொங்கும் தைரியம் கண்ணில் தெறிக்க
நிமிர்ந்து நின்று இந்த உலகமே
எனக்காக இயங்குவதைப் போல்
ஆனந்தமாய் புன்னகைக்க முடிகிறதே என்னால்.
ஆனந்தமாய் புன்னகைக்க முடிகிறதே என்னால்.
என் ஒட்டுமொத்த வாழ்க்கையையும்
அள்ளி எடுத்து கசக்கி பிழிந்தால்
சொட்டும் நீரின் ஒவ்வொரு துளியிலும்
உன் முகமே நிறைந்து நிற்கும்.
உன் முகமே நிறைந்து நிற்கும்.
வாழ்தலை நீ தானே கற்று தந்தாய்
வாழ்க்கையை நீ தானே வசந்தமாக்கினாய்.
உன்னை அறிந்ததற்காய் பெருமிதமடைகிறேன்.
என்னை நீ தெரிந்து கொண்டதை எண்ணி உவகை கொள்கிறேன்.
சாவின் விளிம்பிலும்
வாழ்வின் மகத்துவங்களை
விவரிக்க உன்னால் மட்டுமே கூடும்.
நீ என்ற ஒரு அற்புதம்
வாழ்வில் நிகழ்ந்ததை தான்
மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
வேறென்ன தான் இருக்கிறது
இந்த வாழ்வில் ருசிப்பதற்கு.
நின் அன்பெனும் மகோன்னதத்தை தவிர.
இந்த வாழ்வில் ருசிப்பதற்கு.
நின் அன்பெனும் மகோன்னதத்தை தவிர.
தேனில் கிறங்கிய வண்டாய்
நின் அன்பிலேயே
நனைந்து கிடக்க வேண்டும்
நித்திய நித்தியமாய்.
நனைந்து கிடக்க வேண்டும்
நித்திய நித்தியமாய்.
12.06.2025.
~.~. ஜெ. சி. நித்யா .~.~.