உதிரும் இலைகளின் மரணத்திற்காக
நிற்பதில்லை பூமியின் சுழற்சி.
நிகழ்ந்து மடியும் நிமிஷங்களின் மரணத்திற்காக
நிற்பதில்லை மனிதனின் செயல்கள்.
ஆனால்,
நிற்பதில்லை பூமியின் சுழற்சி.
நிகழ்ந்து மடியும் நிமிஷங்களின் மரணத்திற்காக
நிற்பதில்லை மனிதனின் செயல்கள்.
ஆனால்,
நான் நிற்கிறேன் இங்கு
உ. .தி. .ர். .ந். .த. . மலரே,
உனக்கு அஞ்சலி செலுத்த.
வாழ்ந்த நிமிஷங்களிலெல்லாம்
மகரந்தங்களால் வாசனை தூவி,
உ. .தி. .ர். .ந். .த. . மலரே,
உனக்கு அஞ்சலி செலுத்த.
வாழ்ந்த நிமிஷங்களிலெல்லாம்
மகரந்தங்களால் வாசனை தூவி,
கூம்பியிருந்த மனங்களை மலர்த்தி,
நசுக்கியவருக்கும் நறுமணம் ஈந்து,
உன்னத பணி செய்கிறோம்
என்ற பெருமை சிறிதுமின்றி,
படைத்தவரின் நோக்கம்
பிறழாமல் நிறைவேற்றி,
மகிழ்ச்சியாய் மரித்தாயோ...
நறும் பூவே,
நீ ஒன்றும் மண்ணில் வீழ்ந்திடவில்லை
மற்றுமொரு சருகாய் மாறிவிட...
என்னைப் போலவே
உன்னை நேசிக்கும்
ஆயிரமாயிரம் மனங்களில்
விழுந்திருக்கிறாய் விதையாக.
மீண்டும் முளைத்திடுவாய்,
உனைப்போல் வாழும் ஆசையை
துளிர்க்கச் செய்வாய்,
என்றென்றுமாக வாழ்ந்திருப்பாய்,
வாடாத நினைவாக...
கசியும் விழிகளுடன்,
JC நித்யா.