இதையெல்லாம் எங்கு சேமித்து வைக்கிறது
இந்த உயிர்?
ஈரப்புல்வெளியில் முதல்முறை கால்பதித்தபோது
உள்ளங்காலில் குறுகுறுத்த குளிர்ச்சியினை...
எவ்வளவு நனைந்தும் போதாமல் ஜன்னலோரம்
கைநீட்டி பெற்ற கடைசித்துளி மழையினை..
என்றோ நள்ளிரவில் மிகப்பிடித்த பாடலோடு
பருகிய தேநீரின் ருசியை
வகுப்பு முடிந்து ஓடிச்சென்று அடித்து பிடித்து
வாங்கி சாப்பிட்ட மக்காச் சோளத்தின் சூட்டினை
நாட்களாயினும் தேடி நுகர்ந்த விரல்களில்
ஒட்டியிருக்கும் மருதாணி வாசத்தை...
இன்னமும் கனவுகளில் மாறாமல் இடம்பெறும்
பள்ளிக்கூட மரங்களை...
~. ~. ஜெ. சி. நித்யா ~.~.
0 comments:
Post a Comment