எங்கு நோக்கினும்
மனிதர்கள் இலைகளை போல் உதிர்கிறார்கள்.
காலம் யாருக்காகவும் நிற்காமல்
கோரமாய் சுழல்கிறது.
வாழ்க்கை துணையை பறிகொடுத்தவர்கள்.
பெற்றோரை இழந்த பிள்ளைகள்.
அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள்.
பரிதாபமாய் நிற்கிறார்கள்
வாழ்க்கை நதியருகில்.
நான்கு சுவர்களுக்குள்
முடங்கியிருக்கும் நாங்களோ
செய்வதறியாது திகைக்கிறோம்.
தேவனே
இரக்கம் காட்ட மாட்டீரா??
கண்ணெதிரில் என் மக்கள்
செத்து மடிகின்றனரே
தவறிழைத்தவனும்
அநீதி செய்தவனும்
அக்கறையற்ற சுயநலவாதிகளும்
தேசத்தை அழிக்க நினைத்தவர்களும்
நன்றாகத்தானே வேடிக்கை பார்க்கின்றனர்
அழிந்து மடிவதெல்லாம்
அப்பாவி ஜனங்கள்தானே.
என் தேவனே என் தேவனே
உம்மை நம்பாதவர்களுக்காகவும்
சேர்த்துதான் வேண்டுகிறேன்.
இந்த வாதையை
நிறுத்த மாட்டீரா.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
0 comments:
Post a Comment