வாழ வைப்பாய் என நேசிக்கவில்லை.
வாழ்தலே நீதானென நேசித்தேன்.
வலி தீர்ப்பாய் என நேசிக்கவில்லை
வலிமையே நீதானென நேசித்தேன்.
யாருமற்றதினால் நேசிக்கவில்லை
சகலமும் நீதானென நேசித்தேன்.
உடன் வருவாய் என நேசிக்கவில்லை
உயிரே நீதானென நேசித்தேன்.
நரகத் தீக்கு தப்புவிப்பாயென நேசிக்கவில்லை
மோட்சமே நீதானென நேசித்தேன்.
இவ்வுலகில்
நேசமெனப்படுவது எதுவும்
நிசமில்லை.
உனையன்றி நேசமென்று
ஏதுமில்லை.
வாழ்தலே நீதானென நேசித்தேன்.
வலி தீர்ப்பாய் என நேசிக்கவில்லை
வலிமையே நீதானென நேசித்தேன்.
யாருமற்றதினால் நேசிக்கவில்லை
சகலமும் நீதானென நேசித்தேன்.
உடன் வருவாய் என நேசிக்கவில்லை
உயிரே நீதானென நேசித்தேன்.
நரகத் தீக்கு தப்புவிப்பாயென நேசிக்கவில்லை
மோட்சமே நீதானென நேசித்தேன்.
இவ்வுலகில்
நேசமெனப்படுவது எதுவும்
நிசமில்லை.
உனையன்றி நேசமென்று
ஏதுமில்லை.
~.~. ஜெ. சி. நித்யா.~.~.
0 comments:
Post a Comment