என்னுள்
நீக்கமற நிறைந்திருக்கும்
உன்னை நுகராமல்
என்னை அறிதல்
நெருங்கி வரும்
எவருக்கும் சாத்தியமில்லை.
நெஞ்சம் விம்மி எழுந்து
விழியில் நீராக கசியாமல்
ஒருபோதும் சொல்ல முடிந்ததே இல்லை
உன் மீதான எனதன்பை.
சுழல் காற்றில் சிக்குண்ட சருகைப்
போன்ற வாழ்க்கையில்
ஏதோ ஒரு சலனமற்ற நிசப்த கணத்தின்
நீட்சி நீ தான்.
சுக்கு நூறாய் உடைந்த பின்னும்
ஏதோ ஒரு சொல் என்னை மீண்டும் நிற்க செய்யுமெனில்
அது உன்னுடைய வார்த்தை தான்.
என்றாவது ஓர் நாள்
"இவள் மிகவும் நேசித்தாள்"
என சொல்லிவிடமாட்டாயா
என்றுதான் காத்திருக்கிறேன்
உயிர்வலி பொறுத்து.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
0 comments:
Post a Comment